×

அன்னமங்கலத்தில்ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும்குறைதீர் கூட்டத்தில் மனு

பெரம்பலூர், ஜன. 8: அன்னமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.பெரம்பலூர் மாவட்டத்தில் 2018ம் ஆண்டு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் அரசலூரில் துவங்கி அன்னமங்கலம், விசுவக்குடி, பூலாம்பாடி, கள்ளப்பட்டி, கடம்பூர், கொளத்தூர் ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கு ஜல்லிக்கட்டு வருகிற 27ம் தேதி நடத்துவதற்கு அனுமதி கோரி அரசலூர் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஏற்கனவே மனு கொடுத்து மாவட்ட நிர்வாகத்துடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக அன்னமங்கலம் ஊராட்சி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தலைவர் மார்ஷல் ராயன் தலைமையில் பேரவையினர் வந்து மனு அளித்தனர். அதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம். கடந்தாண்டும் தமிழக அரசின் அனுமதியுடன் முதல்முதலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல் இந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : jail ,Annamangalam ,
× RELATED நெல்லை பாளையங்கோட்டை சிறையில் மோதல்: 3 கைதிகள் மீது வழக்கு